27ம் திகதி பூரண ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்​டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...

வறுமையின் காரணமாக தொழிலிற்கு சென்ற சிறுவன் சடலமாக வீடு திரும்பிய அவலம்!!

முல்லைத்தீவு பாலிநகர்ப் பகுதியில் யுத்தத்தில் தந்தையை இழந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக 16 வயதில் தொழிலிற்காக கொழும்பு சென்ற நிலையில் நேற்றைய தினம் சடலமாக வீடு திரும்பிய அவலம் நிகழ்ந்த்து. குறித்த சம்பவத்தில் பாலிநகரைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் - வினோதன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பி்தேச...
Ad Widget

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்கள் சமர்ப்பிப்பு

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம்...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தல்!

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக...

திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப்பெண் மரணம்

சமுர்த்தி கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது கர்ப்பிணித் தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த கர்ப்பிணிப்பெண் வீதியில் மயங்கி விழந்ததையடுத்து உறவினர்களும் அயலவர்களும் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் அதற்கிடையில் அவரது உயிர்பிரிந்துவிட்டது. இறக்கும்போது கர்ப்பவதியாக...

காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா நேற்று...

கிளிநொச்சி அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களத்தின் செயற்பாடுகள்: அரச அதிபர்

வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்டச்செயலகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத் திணைக்களத்திற்குரியவை என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை...

நில மீட்பு போராட்டத்தை கைவிடாதீர் : முதலமைச்சர் ஆலோசனை

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும்...

கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும்: இராணுவம் திட்டவட்டம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளது. திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடுகள்...

வட்டுவாகல்,கேப்பாபிலவு போராட்டங்களில் கஜேந்திரகுமார் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் நேற்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும்...

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...

தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று (17) கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் இருபது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த தங்கங்களை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...

மினி சூறாவளி ; 38 வீடுகள் சேதம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள்...

பூநகரி முட்கொம்பனில் விபத்து : முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் முன்சென்ற வாகனத்தில் மோதி ஒருவர் பலி

பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி...

தமக்கு எதிராக போராடும் மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய இராணுவத்தினர்!

முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...

புதுவருடத்தை துக்கதினமாக அனுஷ்டித்த மக்கள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...
Loading posts...

All posts loaded

No more posts