Ad Widget

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார்.

இதனால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை வினவிய போது, இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிப்பதாகவும் ஊடகங்களுக்கு தன்னால் பதில் வழங்க முடியாது எனவும் மறுத்துள்ளார்.

மாணவர்கள் குற்றம் செய்தால் தண்டித்தல் உண்மையாகவே வரவேற்கத்தக்க விடயம்.

ஆனால், மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமளவிற்கு தாக்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என பெற்றோர்களும் கல்வியியலாளர்களும் கண்டித்துள்ளனர்.

Related Posts