- Sunday
- June 22nd, 2025

மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில்...

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே சட்டத்தரணி...

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை வெளியாகியுள்ளது. நேற்று மேலதிகமாக கைதான5 பேர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை...

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி, இனம்தெரியாத நபர்களினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை...

எதிர்வரும் சனிக்கிழமை (16), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (17) களில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் புகையிரதப் பாதையில் திருத்த வேலைகாரணமாக இரு நாட்களும் அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே இடம்பெறவுள்ளது.

யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக...

வடகொரிய தலைவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் யொன்- சொல், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னால் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் மரண தண்டனைக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்....

யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றம் ஏற்பாட்டில் நாளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.சுமந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 15.5.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” வெளியில் தமிழர்களுக்கு...

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்;. உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான...

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

தூயநீருக்காக நல்லூர் முன்றலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராதப் போராட்டம் ஆளுனர் பள்ளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் போன்றோரது நேரடித் தலையீட்டினால் சற்று முன்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுனரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக உண்ணாவிரதிகளின் முக்கிய கோரிக்கைகளுக்குச்...

அண்மையில் கனடா சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் , முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சிறுபிள்ளைத்தனமாக கருத்து மோதிக்கொள்வதாக கூறினார். அத்துடன் தான் வருகின்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில்போட்டியிடப்போவதாகவும் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் தெரிவித்தார் அத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானம் தனக்கோ சம்பந்தனுக்கோ தெரியாது...

மீள் குடியேற்றம் என்று கூறுகிறார்கள், ஆனால் ஓசை படாமல் வீட்டை இடித்து தள்ளுகிறார்கள். -விக்கி ஆவேசம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த இந்த விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், அங்கு மேடையில்...

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை...

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று புதன்கிழமை (11.03.2015) கையளித்துள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக...

All posts loaded
No more posts