வவுனியா அரச அதிபரை இடமாற்ற கோரி வடக்கு மாகாண சபையில் முழுநாள் போராட்டம்!

வட மாகாண சபையின் 31ஆவது அமர்வு சபை உறுப்பினர்களின் முழுநாள் போராட்டமாக நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றக் கோரிய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அந்த இடமாற்றத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சபை உறுப்பினர்கள் சபையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் தொடர் பேச்சின் பின்னர் அவை மண்டபத்துக்கு சென்ற உறுப்பினர்கள்...

மற்றைய எம்.பி.க்களும் தமது நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் மாவைக்கு சாட்டை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுக்கொண்டதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜானாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள விக்னேஸ்வரன், தனது முறைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ...
Ad Widget

கூட்டுறவு அமைப்புக்களில் இளைஞர்களை உள்வாங்குங்கள்: கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசன்

வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக அதிக எண்ணிக்கையான இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுமாறு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பணித்துள்ளார்.   வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் கூட்டுறவு அபிவிருத்தி...

சரணடையும் புலிகளிற்கு மகிந்த என்னிடம் உயிருத்தரவாதம் தந்தார்- அம்பலப்படுத்துகிறார் சந்திரகாந்தன் சந்திரநேரு!

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவிற்கு, இலங்கை அரசுடன் இடைத்தரகராக பணியாற்றிய சந்திரநேரு, அது பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

உடுத்துறையில் காவல்துறை செய்தது என்ன! உண்மைகள் இதோ

உடுத்துறையில் காவல்துறை சுட்டது பற்றிய செய்திகள் காவல்துறையின் வாக்கு மூலத்துடன் உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபரின் குடும்பத்தின் மீது கஞ்சா காய்ச்சுவதாக காவல்துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சென்று விசாரித்ததில் அங்கு தடயங்கள் எதுவும் இல்லை . தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்த குடும்பத்திற்கு தெரிய வந்தது ம்.தகவல்கொடுத்தவரது வீட்டில் தாக்குதல்...

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது....

யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல!-டக்ளஸ்

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத...

வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர்,...

யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எப்படித் தப்பிச் சென்றார்? தமிழ்மாறன் கேள்வி

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வி ரி தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை‬ பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இருந்து வரும் அரசியல்...

கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி ஊடாக இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது கைதடி வீதியால் வந்த கனரக வாகனத்தோட கோப்பாய் சந்தியில் வைத்தே இவ்விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது யாழ்.போதனா...

துவாரகேஸ்வரன் மக்களை ஏமாற்றுகின்றார் – வேலைணை பிரதேச சபை தலைவர்

கடந்த வியாழக்கிழமை, 21 மே 201 லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தன்னை ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளா் எனக்கூறிக்கொள்ளும் வா்த்தகா் துவாரகேஸ்வரன் வழங்கிய செய்திக்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சின்னையா சிவராசா ( போல்) அவா்கள் தெரிவித்த...

நீதிமன்றம் தாக்குதல்; யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

யாழ் மற்றும்  ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   பொலிஸ் மா  அதிபர் இலங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.   அதன்படி யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர சீதாவாக்கைபுர பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றப்பட்டுள்ளார்.    அதேபோல...

புங்குடுதீவில் நடந்தது என்ன? குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்; தமிழ்மாறன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதியும் சட்டத்தரணியுமான வீ.ரி தமிழ்மாறன் மறுக்கின்றார். கைதுசெய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்றும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு மேலும்...

இப்படியும் இங்கே ! நேற்று நடந்த கூத்து

இவர் வித்தியாவிற்கான போராட்டம் என்ற பெயரில் சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன் பிரதான வீதியில் மதுபோதையில் நின்று அட்டகாசம் செய்த நபர். கஸிப்பு குடித்துவிட்டு இரவு 11 மணி வரை போராட்டம் செய்யப் போகிறாராம். வீதியால் எவரும் போக விட மாட்டாராம். வீதிக்கு குறுக்கே கயிறு கட்டி போக்குவரத்துக்களை தடை செய்திருந்தார். விக்டோரியா கல்லூரி ஆசிரியர்களைக்...

வித்தியாவின் படுகொலை : சி.ஐ.டி களத்தில் !!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுப்படுகொலை தொடர்பலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின், கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ். புங்குடுதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ்...

எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்: வடக்கு முதல்வர் காட்டம்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும்.    நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.   ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை...

வன்முறைக்கு காரணம் சிறு சிறு உதிரிக்கட்சிகளே! -சட்டத்தரணிகள்!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.   யாழ்.  நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் கூறுகையில்,   புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர்...

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்!

நாளை பஸ் சேவை அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பகிஸ்கரிப்பில்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை ‪தனியார் பேருந்துகள்‬‎அரச பஸ்கள்‬ சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி...
Loading posts...

All posts loaded

No more posts