- Sunday
- June 22nd, 2025

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என...

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை...

வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை. அதற்காக வருந்தவில்லை மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள...

தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டுறவுதின நிகழ்ச்சி யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04.07.2015) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கொழும்பு உட்பட வேறு பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாகச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்றும் கூட்டமைப்பின்...

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதும்இ அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஐனநாயக உரிமை! அதை மறுப்பதும்இ தடுப்பதும் அப்பட்டமான ஐனநாயக...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சிறிது காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளை...

ஸ்ரீ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குழுவினருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என சு.கா மற்றும் ஐ.ம.சு.கூ ஆகிய கட்சிகளின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதேவேளை, ஐ.ம.சு.கூ.வின் அதிகாரத்தைப் பெற்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மஹிந்த...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த...

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அக் கடிதத்தில்...

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக் கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற - தாம் ஆற்றக்கூடிய - பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர். சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் ஒருங்கிணைப்பில் வடமாகாணத்தில் உள்ள முன்னாள் சிரேஷ்ட போராளிகள் பலர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்....

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய எச்சரித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் என்று ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இரவு அறிவித்த பின்னணியில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம்...

ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சாவகச்சேரி கண்டிவீதியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில்...

யாழ்.குடாநாட்டில் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு இதுவரை 100ற்கு மேற்பட்டவர்கள் உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த வைரஸ் தொற்று இருந்த போதும் கடந்த சில வாரங்களாகவே குறித்த வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மன்னார் மாவட்டத்தைச்...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது சகேதரர்களான கோத்தபாய, பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான...

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேட்புமனுத்தாக்கல் அடுத்தமாதம்...

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் இன்று காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார்...

All posts loaded
No more posts