Ad Widget

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் தனித்து போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சிறிது காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.

ஆனந்த சங்கரி, விடுதலைப் புலிகளை விமர்சித்து பல அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியது.

இதனால், கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிட்டது.

அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இம்முறை பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

Related Posts