புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே சட்டத்தரணி தமிழ்மாறனை பொலிஸாருடன் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி பொலிஸாரது வாகனத்தை இடைமறித்து புங்குடுதீவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் பொலிஸாருக்கும்,மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.