நாங்கள் சுடவில்லை: கடற்படை

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டமை பொய்யானச் செய்தி என, கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டின் கமாண்டர் சமிந்த வலாகுல​​கே தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான துப்பக்கிச் சம்பவம், இலங்கை கடற்பரப்பில் நேற்றையதினம் இடம்பெற்றிருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் அடித்துக் கொலை

தெரணியகல, மாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ள ஏழுவயதான பெண் பிள்ளையும், 45 வயதான மற்றுமொரு நபரும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. அவர்களின் வீட்டுக்கு நேற்றிரவு வருகைதந்த இனந்தெரியாத நபரே இக்கொலைகளை புரிந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான பெண்பிள்ளையின் தாய், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர...
Ad Widget

வட்டுக்கோட்டையில் நேற்று வாள்வெட்டு! சகோதரர்கள் இருவர் படுகாயம்!!

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக சகோதரர்களான இரு குடு ம்பஸ்தர்கள் மீது 20 பேர் கொண்ட குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த குடும்பஸ்தர்கள் இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவேறு கிராம இளைஞர்களுக்கிடையில் விளையாட்டு...

நாளை ஹர்த்தால் இல்லை!

முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்பு மக்களின் 30 நாள் தொடர் போராட்டத்தை அடுத்து, அந்த மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாத பட்சத்தில் வடக்குக் கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூடிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி உறுதி அளித்ததின்படி பிலவுக்குடியிருப்பு மக்களின்...

தாக்குதல் அச்சத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள்!

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிடருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூமு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது மீனவர் உயிரிழந்தார்....

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடலோர எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி...

இலங்கை, பங்களாதேஷ் முதல் டெஸ்ட் : துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் ஹேரத், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்லஅசேல குணரத்ன, டில்ருவான்...

தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி : அசங்க குறுசிங்ஹ!

20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்

அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: மருத்துவ அறிக்கை தகவல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை...

அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சிக்கு அழைப்பு: ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

அரச பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சிச் செயலமர்வை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிக்கு வருமாறு தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் ஜனநாயக போராளிகள் கட்சி இணைவு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15வது நாளாக நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக போராளிகள் கட்சியும் நேற்று(திங்கட்கிழமை) முதல் இணைந்துள்ளது. போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.பிரபாகரனின் தலைமையில் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தியுள்ளனர். நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, 2012ம் ஆண்டிற்குப்பின்னர் வெளியாகிய சுமார் 1600...

மக்களது காணிகளை பறித்து ராணுவத்திற்கு கொடுப்பதை அரசு நிறுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை பறித்து ராணுவத்தினருக்கு கொடுப்பதை அரசாங்கம் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு வாழும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று தசாப்த காலமாக காணி உறுதி அற்ற நிலையில் வாழ்ந்துவரும் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், நேற்று...

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே...

காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: அரச அதிபர்

காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும்...

இலங்கைத் தம்பதி இந்தியாவில் கைது!

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற தம்பதியினரை இந்திய கியூ பிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பா இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய தம்பதிகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக, படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில் இருவரும் திருமங்கலத்திலுள்ள...

கிளிநொச்சியில் 244 பேருக்கு பன்றிக் காய்ச்சல்! கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர்,...

தமிழரசுக் கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு! பலத்த பாதுகாப்புடன் சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், கட்சியின் உறுப்பினர்களாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர். தமிழரசுக் கட்சியில் புதிதாக இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பருத்துறை அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதன்போது, கட்சியில் புதிதாக...

முதல்வர் சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப்

நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கெஷாப், சந்தித்து குசலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் 16 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டு வன்புணர்வு: இருவருக்கு தசாப்த சிறை; ஒருவருக்கு பிடியாணை!

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (06) தீர்ப்பளித்தார். அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின்...

பாடசாலை மாணவர்களுக்கு காதில் அடிக்காதீர்!

பாடசாலை மாணவர்களுக்குப் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அவர்களின் காதுகளில், ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை மருத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் சந்த்ரா ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , "ஒருவரின் காதில், இன்னொருவர்...
Loading posts...

All posts loaded

No more posts