Ad Widget

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துடன் ஜனநாயக போராளிகள் கட்சி இணைவு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 15வது நாளாக நடாத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக போராளிகள் கட்சியும் நேற்று(திங்கட்கிழமை) முதல் இணைந்துள்ளது.

போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.பிரபாகரனின் தலைமையில் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தியுள்ளனர்.

நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, 2012ம் ஆண்டிற்குப்பின்னர் வெளியாகிய சுமார் 1600 பட்டதாரிகள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டத்திற்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், தீர்வு எட்டப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts