இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற தம்பதியினரை இந்திய கியூ பிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பா இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய தம்பதிகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக, படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில் இருவரும் திருமங்கலத்திலுள்ள உச்சப்பட்டி எனும் இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அங்குவைத்து குறித்த தம்பதியினர் கியூப் பிரிவுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இவர்கள் இருவரும் மதுரை மதுரை ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.