Ad Widget

வட்டுக்கோட்டையில் நேற்று வாள்வெட்டு! சகோதரர்கள் இருவர் படுகாயம்!!

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக சகோதரர்களான இரு குடு ம்பஸ்தர்கள் மீது 20 பேர் கொண்ட குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த குடும்பஸ்தர்கள் இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவேறு கிராம இளைஞர்களுக்கிடையில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறே வாள்வெட்டுக்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.நேற்று மாலை 4 மணியளவில் தகராறு ஏற்பட்டதனைத் தொடர்ந்து 20 பேர் கொண்ட குழுவினர் மூளாயில் உள்ள குறித்த இரு குடும்பஸ்தர்களின் வீட்டுக்குள் மாலை 5.30 மணியளவில் வாள்கள், பொல்லுகள் சகிதம் புகுந்துள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த சகோதர்களான சந்திரராசா ரவீந்திரன் (வயது-36), சந்திரராசா பிரதீபன் (வயது-33) ஆகிய இரு குடும்பஸ்தர்கள் மீது சரமாரியாக வாள் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து 20க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட அக்குழு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக் கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts