மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது : பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா

மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார் . கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகள் வெளிப்படைத் தன்மையற்ற கேள்விப் பத்திர முறைமையும் அமுலானதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அரசாங்கம்...

வித்தியா கொலையின் சூத்திரதாரி சுவிஸ் குமார் :6 வது சாட்சி தெரிவிப்பு

அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி...
Ad Widget

வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல்

இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்....

யாழ். பல்கலையின் விவசாய, பொறியியல் பீடங்களுக்கான கட்டடம் திறந்துவைப்பு

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான...

முன்னாள் போராளிகள் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

புனர்வாழ்வு பெற்றவர்கள் என்ற காரணத்தால் தனியார் மற்றும் அரச துறைகளில் தமக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்து உரையாற்றிய போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும், புனர்வாழ்வின் பின்னரே...

நாளை முதல் புதிய பேருந்து கட்டணம் அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய பேருந்துக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என கூறப்பட்டிருக்கம் அதேவேளை பேருந்து கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள்...

அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்

அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். அரச வைத்தியசாலைகளில் மீளவும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையினர் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத்...

வித்தியாவிற்கான நீதிக்கு துணை வருகிறது சுவிஸ்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார். வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட் பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில்...

எதிரிகளை அடையாளம் காட்டினார் : புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், நேற்றய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது. அதன் போது...

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு!

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாகவே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விகாரையை விட்டு...

மீளாய்வு செய்யும் வரையில் பதவிகளை பகிர்ந்தளித்தேன் : வடமாகாண முதலமைச்சர்

“மீளாய்வு செய்யும் வரையில், அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அமைச்சுகளை பகிர்ந்து வழங்கியுள்ளேன்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், குறித்த பணிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் ​பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும்,...

அஞ்சல் ஊழியர் போராட்ட நிறைவு

தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை அஞ்சல் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத் தெரிவித்தார். அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமது நியாயமான பதில் கிட்டியதாக தொற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....

உரும்பிராய் காணியில் கைக்குண்டு மீட்பு

உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில், கட்டடப்பணி இடம்பெற்ற போது, மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு தென்பட்டுள்ளது. இது தொடர்பில், பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் அமைச்சர் அனந்தி

வடக்கு மாகாணசபையின் மகளிர் விவகார கூட்டுறவு புனர்வாழ்வு அமைச்சராக பொறுபேற்று கொண்ட அனந்தி சசிதரன் நேற்று (வியாழக்கிழமை) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 129 நாட்களை கடந்துள்ளநிலையில் அமைச்சு பொறுப்பை ஏற்கொண்ட அனந்தி சசிதரன் நேரடியாக போராட்ட இடத்துக்கு சென்று அங்கு...

யாழ். பொது நூலகத்திற்கு 16,000 நூல்கள் அன்பளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16,000 நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. குறித்த அன்பளிப்பை பொது நூலகத்தில் வைத்து நேற்று யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் மற்றும் பிரதம நூலகரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சன்தூ வழங்கி வைத்தார். இந்திய மக்களினால் யாழ்.பொது நூலகத்திற்கென அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 16 ஆயிரம்...

பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமை இல்லை: சுமனரத்ன தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

போக்குவரத்துக் குற்றங்களுக்கு தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி , தண்டப்பண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு தினத்தில் இருந்து மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்டப்பணத்தை செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....

முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

இலங்கையில் சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் அமெரிக்க பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலுள்ள முச்சக்கர வண்டிகளில் ஏறுவதனை தவிர்க்குமாறு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி சாரதிகள், பெண் சுற்றுலா பயணிகளிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் பல சம்பவங்கள்...

வடக்கின் விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா தெரிவிப்பு : சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சத்து உறுதியளித்துள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், பலாலி விமான...

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ; மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது சாட்சிப்பதிவின் போது மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இம் முக்கிய 5...
Loading posts...

All posts loaded

No more posts