- Monday
- May 18th, 2026
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதி வரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக...
வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்களாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) காலை மாகாண அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். விவசாய அமைச்சை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை காலமும் விவசாய அமைச்சின் பிரிவுகளாக காணப்பட்ட...
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கட்சி நிலைப்பாடுகளை தாண்டி செயற்படுவதாகவும் அவருக்கு ஆதரவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என சின்னக்கதிர்காமர் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரன் வீட்டில் ஒடுங்கிய வீதிக்குள் திரண்ட நூறு பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் தனக்கு மக்கள் செல்வாக்கு உண்டென கருதுவாராக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சொன்னதைப்போலவே நானும் சொல்கிறேன் முடிந்தால் மாகாணசபையை...
எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு சைக்கிளில் தான் செல்வாள் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்ல 1 தொடக்கம் 1 அரை மணித்தியாலம் தேவைப்படும் பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா) வித்தியாவை பாடசாலைக்கு அழைத்துச் செல்வான் சிலவேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் கூட படிக்கும் சக பிள்ளைகளுடனேயே வித்தியா செல்வாள். எனது...
நாங்கள் மக்கள் முன்னால் பிளவுபட்டு நிற்க முடியாது. அதற்காகவே சமரச முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் நியமனம் மேற்கொண்டமை தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக்...
முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக் குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும்...
பல்கேரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் 32 பேர், அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள், விசேட விமானத்தின் மூலமாக அவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு, நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறியே, அவர்களை மனித கடத்தல்காரர்கள்...
அண்மையில் பெய்த பெரு மழைக்குப் பின்னரான வறட்சி நிலை காரணமாக பயிர்ச் செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சுமார் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் வின் உணவு,விவசாய அமைப்பு கூறுகிறது. 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஆரம்பகால வறட்சி நிலை பரவலாக பயிர்ச்செய்கையை பாதித்துள்ளது. குறிப்பாக நாட்டின் பிரதான உணவான நெல்...
அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும்,...
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை...
சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார். வழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று...
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதம் தொடர்பில் அமெரிக்கா ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜொனி மிதிவெடி மற்றும் பல ஆயுதங்களுக்கு விடுதலை புலிகள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்துள்ளனர். வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு...
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பில் இருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம். இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகம் உட்பட துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே-249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54 #ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச...
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டிய ஊடக விதிமுறையைக் மீறி மலிங்க கருத்து வெளியிட்ட காரணத்தால்,மலிங்க மீது விசாரணைகள் மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று மாலை அந்த குழுவினர்...
சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள்...
“ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர் தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி, தமிழரை இனவழிப்புச் செய்கின்ற மூலோபாயத்தின் கருவிகளாக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். கடந்த வாரம், கிளிநொச்சி நகரில் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த “ஈழம்”...
Loading posts...
All posts loaded
No more posts
