Ad Widget

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கண்டு ஆச்சரியத்தில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதம் தொடர்பில் அமெரிக்கா ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஜொனி மிதிவெடி மற்றும் பல ஆயுதங்களுக்கு விடுதலை புலிகள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்துள்ளனர்.

வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த பல மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த குண்டுகளையும், ஆயுதங்களையும் பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்ட கனடா, அவுஸ்திரேலியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இராணுவ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தெரிந்து கொண்டதன் பின்னரே அவர்கள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.

Related Posts