Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் அமைச்சர் அனந்தி

வடக்கு மாகாணசபையின் மகளிர் விவகார கூட்டுறவு புனர்வாழ்வு அமைச்சராக பொறுபேற்று கொண்ட அனந்தி சசிதரன் நேற்று (வியாழக்கிழமை) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 129 நாட்களை கடந்துள்ளநிலையில் அமைச்சு பொறுப்பை ஏற்கொண்ட அனந்தி சசிதரன் நேரடியாக போராட்ட இடத்துக்கு சென்று அங்கு போரட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்துள்ளார்.

காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடந்த காலத்தில் அனந்தி சசிதரன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் வடக்கு மாகணத்தின் அமைச்சராக பதவியேற்றுள்ளமை மக்கள் மத்தியில் நம்பிக்கை தரக்கூடியதாக இருப்பதாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கமும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts