டுவிட்டர் தளத்தில் மோதும் நாமல், விஜயகலா!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால், முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும்” என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில்...

அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை!

மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுப் பேருரையும் ‘இலட்சிய இதயங்களோடு’ நூல் வெளியீடும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டு மங்கள...
Ad Widget

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...

முதலமைச்சருக்கு உள்ள அதிகாரங்களை முதலமைச்சர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை: டெனீஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக வடமாகாண முன்னாள் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடமாகாண முதலமைச்சர் மற்றும்...

பொருத்து வீடுகளுக்கு எதிராக மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் சுமந்திரன்!

65000 பொருத்து விடுகளுக்கு எதிரான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கில் 65000 பொருத்து வீடுகளை அமைப்பது குறித்து அமைச்சர் சுவாமிநாதனுக்கும் பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மனுவையே சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நிறுவனத்துடன்...

உலகக் கிண்ணத் தகுதியை இலங்கை இழந்து விட்டதா?

இந்­தி­யா­வுக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 4–0 என இழந்­துள்­ளதால், உல­கக்­கிண்­ணத்­துக்கு நேர­டி­யாக தகுதி பெறு­வதில் சிக்­கலை சந்­தித்­துள்­ளது. ஐ.சி.சி. தர­வரிசைப் பட்­டியலில் 87 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்­திலும், 78 புள்­ளி­க­ளுடன் மே.இ.தீவுகள் அணி 9ஆவது இடத்­திலும் உள்­ளன. இங்­கி­லாந்து அணி போட்­டியை நடத்தும் நாடு...

மாணவன் ஒருவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...

யாழில் மியன்மார் இனப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மியன்மாரில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை உடனே நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் மையப் பேருந்து நிலையத்தில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பருத்தித்துறையில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயினால் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் விற்பனை நிலையத்திற்கு திட்டமிட்டு...

தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும்! : அனைவருக்கும் அழைப்பு

‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...

முதலமைச்சருக்கு எதிராக டெனிஸ்வரன் மனு

தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த...

துணுக்காய், அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....

தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் சாதனை

தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றிப் பாய்தலில் புதிய சாதனை ஒன்றை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் நாட்டியுள்ளார். தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 3.34 மீற்றர் உயரத்தில் கோல் ஊன்றிப் பாய்ந்து இந்த சாதனையை அவர் நிலை நாட்டியுள்ளார்.

தமிழ் பெண்மணிக்கு கிடைத்த ஆசியாவின் உயரிய கௌரவம்!

இலங்கை தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு...

உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனித ஹஜ் பெருநாள் இன்று!!

உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு...

இதயசுத்தியுடன் கூடிய அதிகாரப் பங்கீடு வேண்டும் : சம்பந்தன்

நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலக தூதுவர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான...

இலங்கைத் தமிழர்களின் தீர்வில் இந்தியா உறுதி: சுஷ்மா சுவராஜ்

இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

வல்வெட்டித்துறையில் மீனவரை காணவில்லை

யாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடி சக மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த...

தமிழ் பெண்களை அவதானிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை...
Loading posts...

All posts loaded

No more posts