Ad Widget

வல்வெட்டித்துறையில் மீனவரை காணவில்லை

யாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடி சக மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்கச் சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts