Ad Widget

பருத்தித்துறையில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் தீயினால் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் விற்பனை நிலையத்திற்கு திட்டமிட்டு தீ வைக்கப்படிருக்கலாம் எனவும் சந்தேகிகப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts