Ad Widget

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது.

ஒலிபெருக்கியின் சத்தத்தினை குறைக்குமாறு பொலிஸாரிடம் பிரதேச மக்கள் கோரியிருந்தனர். சம்பவ இடத்திற்கு கடமையில் இருந்த பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவசர அழைப்பு பொலிஸாருக்கும், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸாரினால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts