Ad Widget

உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts