- Tuesday
- May 5th, 2026
தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே இவ்வாறு 32 அடி உயரத்தில் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (வியாழக்கிழமை) வடக்கு...
நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது நீதித்துறைக்கும், ஜனநாயகத்திற்கும் விழுந்து பேரிடி என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுனரின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் அமைதி...
தியாக தீபன் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் இன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும் தமிழ் மக்களின் வேணவாக்கள் வெற்றி பெறவும் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றினையுமாறு...
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தததும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் மகேந்திர ஜெயசிங்க...
பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும்...
யாழ்ப்பாணம் நகரில் வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் வீழ்ந்த சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்...
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்....
இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மோதலை ஏற்படுத்த நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடலை தகனம் செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்து...
எம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் விடுமுறைகளும் வீணாகிப்போயுள்ளன. 30 ஆண்டுகால யுத்த சூழ்நிலைகளால் தமிழர்...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை...
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெளத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று முழுதாகவே இல்லாதொழிக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையினால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட...
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரர் உட்பட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளபோதும் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள், பொதுமக்கள்...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 200மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல்,...
சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வல்லிபுரம் திருச்செல்வம் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். பணி நிமித்தம் நேற்றுக் காலை சென்ற அந்த நபர் இரவு வரை வீடு திரும்பாததை அடுத்தே மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களை அடுத்தே...
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அமைப்புகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை பொலிஸார் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தமையென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்து அந்த பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார், அந்த உத்தரவை...
நீதிமன்ற தீா்ப்பினை மீறி நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா். இதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகீஸ்காிப்பில் இறங்கினா். நீதிமன்ற தீா்ப்பினை மீறி பொலிஸாா் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வத ற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக...
Loading posts...
All posts loaded
No more posts
