Ad Widget

நீராவியடியில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரம் – போராட்டத்திற்கு அழைப்பு

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை (உண்ணாப்பிலவு வைத்தியசாலை) முன்பாக ஒன்றுகூடும் மக்கள், அங்கிருந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்போது அரசாங்கத்திற்கான மகஜர் மாவட்ட செயலாளரிடம் வழங்கப்படும் அதேநேரம், ஐ.நா. சபைக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டமொன்றை முன்னெடுக்கவுளது

Related Posts