தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே இவ்வாறு 32 அடி உயரத்தில் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (வியாழக்கிழமை) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு அவரின் உருவம் தாங்கிய ஊர்தியுடனான நடைபயணமொன்றும் கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தைச் சென்றடைந்தது.
இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.