- Wednesday
- January 14th, 2026
இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)
கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு வை.கே சிங்ஹா நேற்று முற்பகலில் ஜனாதிபதி அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)
பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் (more…)
தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த பண்டத்தரிப்பு பல்லசுட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் (more…)
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 ஆயிரத்து 269 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார். (more…)
கல்விப்பொதுத் தராதரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகளில் ஒருவரை, பரீட்சை மண்டபத்திற்குள் வைத்தே சாரைப்பாம்பு தீண்டிய சம்பவமொன்று ஹொரணை, ஸ்ரீ மெதலங்கர வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. (more…)
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஜோதிகா.இவருடன் அதிகமாக நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். (more…)
தனது கணவரைக் கொன்றவர் எனக் கூறப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக அந்த நபரின் தம்பியை கூலிப்படையை ஏவிக் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். (more…)
தேங்காய் கொள்வனவுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த திருகோணமலை வியாபாரி ஒருவர், திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 ஆயிரத்து 284 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (13) தெரிவித்தார். (more…)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டம் ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா நிதியுதவி நேற்று புதன்கிழமை (13) வழங்கப்பட்டுள்ளது. (more…)
காரைநகர், ஊரிப் பகுதியில் கடற்படை வீரரால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எந்தவிதமாக உதவிகளும் கிடைக்கவில்லையென வலி. வடக்குப் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். (more…)
தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூறுவதற்கு முதலில் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நேற்று புதன்கிழமை (13) தெரிவித்துள்ளார். (more…)
இந்திய வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1000 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் தொடக்கம் 27 ஆயிரம் வரையிலான வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
