பிரித்தானிய தூதுவராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு ரிவேரா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
சமாதான அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு, வடக்கில் இராணுவ மயமாக்கல், திட்டமிட்ட குடியேற்றம், ஐக்கிய நாடுகள் சபை மக்களின் பாதுகாப்புடன் கூடிய யுத்தக் குற்ற விசாரணையை முன்னெடுத்தல் பற்றியும் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் பேசப்பட்டன.
பிரதி உயர் ஸ்தானிகர் அவர்கள் யுத்தக் குற்ற விசாரணையின் போது நீங்கள் சாட்சியம் அளிப்பீர்களா என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்ட போது மூன்று பேரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.