Ad Widget

முன்னாள் போராளி, ரி.ஐ.டி யிடம் ஒப்படைப்பு

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (11) தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்ட கிளிநொச்சி விநாயகர்புரத்தை சேர்ந்த பீற்றர் விக்கினேஸ்வரன் (வயது 34) என்பவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை ரி.ஐ.டி யினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts