இன்று ஜனாதிபதி பதவியேற்றதன் நான்காவது வருட பூர்த்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (19) 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. (more…)

மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பம்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னால் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)

உடுவிலில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

யாழ்.உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று உடுவில் சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது – டக்ளஸ்

அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

முதன் முறையாக அவைத்தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு

வடக்கு மாகாண சபையின் அமர்வுக்கு முதன் முதலாக செங்கம்பளத்தில் அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்ட நிகழ்வு 19ஆவது சபை அமர்வான இன்று நடைபெற்றது. (more…)

5 தமிழக மீனவர்களின் மேல்முறையீட்டு மனு வாபஸ்!

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். (more…)

உத்தமவில்லன் படத்தில் கமலின் புது கெட்டப்

உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன், நிறைய வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார். (more…)

விஜய் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் – ஸ்ரீதேவி

1970 மற்றும் 80களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். பிறகு இந்தி படங்களில் நடிக்க மும்பை சென்று பாலிவுட்டிலும் கலக்கி அங்கேயே செட்டில் ஆனார். (more…)

சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்தமை பயங்கரமான பிரச்சினை – அரசாங்கம்

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். (more…)

யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லை!

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பஸ்தரைக் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

2013-2014 ஆம் ஆண்டு வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்கவும்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துபவர்கள் 2013-2014ஆம் ஆண்டுக்குரிய வரி விபரத்திரட்டுக்களை, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, (more…)

யாழில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்தால் உயிரிழப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக, யாழ். போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்கிழமை (18) தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம்!

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர். (more…)

உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியாத நிலையில் தமிழினம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

திருச்சியில் 20 இலங்கை அகதிகள் தற்கொலைக்கு முயற்சி!

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் நேற்று (18) தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

ஜனாதிபதியின் பிறந்த நாள் : அங்கஜன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் (more…)

இலங்கையில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து!!

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழகம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது – விஜயகலா

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே விஜயகலா இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட கிழக்கு கல்வி அபிவிருத்தி பணிகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லையென தெரிவித்தார். இதேவேளை வடகிழக்கு...

புனிதமான கார்த்திகை மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது – ஈ.சரவணபவன்

கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் (more…)
Loading posts...

All posts loaded

No more posts