Ad Widget

ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் எட்டு குழந்தைகளின் சடலங்கள்

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாண்டில் உள்ள கெய்ன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

34 வயதுப் பெண்மணி ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

aust-1

aust-2

aust-3

அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு, எப்படி இந்தச் சம்பவம் நடந்த்து என்ற விவரங்கள் இதுவரை தெளிவாகவில்லை. இந்தக் குழந்தைகள் எல்லாம் 18 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளாவர்.

இந்தக் குழந்தைகள் குத்திக்கொல்லப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய காவல்துறை இதுவரை இதனை உறுதிப்படுத்தவில்லை.

இது ஒரு துயர சம்பவம் என்று குறிப்பிட்டிருக்கும் காவல்துறை, இதனால் பொதுமக்கள் கவலையடையத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

மனூரா புறநகர்ப் பகுதியில் இருக்கும் இந்த வீட்டில் புலனாய்வு அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் காவல்துறை, காயமடைந்த பெண், தங்களுக்கு விசாரணையில் உதவிவருவதாகத் தெரிவித்தனர்.

இந்தக் குழந்தைகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என கெய்ன்ஸ் நகர புலனாய்வு ஆய்வாளர் ப்ரூனோ எஸ்னிகர் தெரிவித்துள்ளார்.

Related Posts