Ad Widget

‘ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தவும்’

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் மாகாண கல்வி திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். வன்னி போன்றே வலிகாமம் கல்வி வலயமும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எமது கல்வி வலயத்தில் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில் வன்னிப் பகுதிக்கு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டமைப்பினர் உதவி

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர். வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான உலர்...
Ad Widget

வரட்சிப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டஈடு

கடந்த 2013ஆம் ஆண்டு நிலவிய வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,761 யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய காப்புறுதி நிதியத்தால் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ககமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் அழிவின் தன்மை மற்றும் அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்குவதற்கான...

மூழ்கிய படகு மீட்டு தரப்படும் – மாவை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம்...

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். வல்வெட்டித்துறை பொலிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவினை ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். எனினும் நீண்ட நாட்களாக...

உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளேன் – சந்திரிக்கா

உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

பொது எதிரணியில் 35 அமைப்புக்கள்; உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. (more…)

1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் மனித நேயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன...

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்

வடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவிணையே எடுக்கும்...

டெங்கு தொற்றுக்கு 9 பேர் நேற்று அனுமதி

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும், கோப்பாய் மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து தலா மூவருமாக ஒன்பது பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்தமாதம் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைக்கு...

மத்திய அரசு மட்டுமல்ல மாகாண அரசும் எங்களைக் கைவிட்டதாகவே உணர்கிறோம்! வலி.வடக்கு மக்கள் வேதனை!!

மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர். நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள்,...

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது தடவையும் ஆட்சிக்கு வந்தால் அவர் ஒரு சர்வாதிகாரியே!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் ஆட்சிக்கு வருவாரானால் அவர் நிச்சயமாக ஒரு சர்வாதிகாரியே. இவ்வாறு தெரிவித்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்தவை வருமாறு:- நாடாளுமன்றத்தில் மூன்றில்...

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியை சந்தித்தனர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, கல்முனை மாநகர...

நாட்டை காக்கும் நீலப்படையணி யாழில் உருவானது

நாட்டை காக்கும் நீலப்படையணி' என்னும் தொனிப் பொருளில் ஆளும் கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் ஓர் கட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 30ம் திகதி யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லுரியில் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது.   இந்தக்...

உலக எயிட்ஸ் தினம் இன்று!

இன்று உலக எயிட்ஸ் தினமாகும். "இன்றே பரிசோதித்துக் கொள்ளுங்கள்" என்பதே இம்முறை உலக எயிட்ஸ் தினத்தின் தொனிப்பொருளாகும். 1981ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் திகதியே முதலாவது எயிட்ஸ் நோயாளி கண்டுபபிடிக்கப்பட்டார். தற்சமயம் உலகம் முழுவதிலும் 35 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயாளியாளர்களாக உள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

பிரபாகரனின் சொத்துக்களை ஏலத்தில் விட தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள...

கிரிக்கெட் மைதானத்தில் மேலும் ஒரு மரணம்

இஸ்ரேலில் கிரிக்கெட் மைதானத்தில் அம்பயர் ஒருவர் மரணமடைந்தது குறித்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் லிமர் லிவ்நட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அஷ்டாட் என்ற நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், ஹிலில் ஆஸ்கர் என்ற அம்பயரின் கழுத்தில் பந்தடி பட்டபின் அவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஆஸ்கர், மருத்துவமனைக்கு...

அஜீத், விக்ரம் பட மோதல் தவிர்ப்பு

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ படங்கள் பொங்கலுக்கு மோத இருந்தன. ஆனால் தற்போது ‘ஐ’ படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் வருவதை தடுக்க ‘ஐ’ படத்தை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர். ‘ஐ’ பட தொழில் நுட்ப...

காவியத்தலைவன் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம் – விஜய்

சித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைய தளபதி விஜய் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ...

தமிழர் உரிமைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு கவனமாக முடிவெடுக்கும்! -மாவை

தமிழரின் உரிமைப் போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு முடிவெடுக்காமல் உள்ளது. பொது எதிரணி, அரச தரப்பு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்த பின்னரே யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்...
Loading posts...

All posts loaded

No more posts