Ad Widget

நோ பயர் ஷோன் ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதியுங்கள்!!

இலங்கை இறுதிப் போரில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய ‘நோ பயர் ஷோன்’ ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுள்ளார்.

callum-macrae-no-fire-zone-channel-4

சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது. இதனபோதே கெலும் மக்ரே மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

இதன்போது, சிங்கள மக்கள் உண்மைகளை அறிந்து விடக் கூடாது எனக் குற்றங்களை இழைத்தோர் எண்ணுகின்றனர். எனவே இந்த ஆவணப் படத்தை இலங்கையின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதிக்கக்கூடாது. இந்த ஆவணப்படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை. – என்றும் சொன்னார்.

Related Posts