Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் – டெனீஸ்வரன்

எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம்...

உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிப்பு

வடமாகாணத்தில் கடமையாற்றும் உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது,...
Ad Widget

ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் எட்டு குழந்தைகளின் சடலங்கள்

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாண்டில் உள்ள கெய்ன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதுப் பெண்மணி ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு, எப்படி இந்தச் சம்பவம் நடந்த்து என்ற விவரங்கள் இதுவரை தெளிவாகவில்லை....

தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை!!

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும்...

தெல்லிப்பழை வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்துக! வலி.வடக்கு பிரதேசசபையில் தீர்மானம்

தெல்லிப்ழை ஆதார வைத்தியசாலை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருப்பதால் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வுகூட தொலில்நுட்பவியலாளர், சிற்றூழியர்கள் என பல்வேறுபட்ட ஆளணி பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது. வடமாகாணத்திலேயே புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, உளநலச் சிகிச்சைப் பிரிவு என்று இருபெரும் அலகுகளைக் கொண்டு இது காணப்படுவதால் எமது இந்த வைத்தியசாலையை பொது...

வடமராட்சியில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். வடமராட்சி முள்ளி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது,...

வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு 213 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் நாளாக இன்று கைதடியிலுள்ள மாகாண சபையின் கட்டடத்தொகுதியில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. தற்போது வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. குறித்த துறைக்கு...

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் சாவு

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

100 நாட்களில் புதிய நாடு – மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம்

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

கேட்டது 149.95 மில்லியன் கிடைத்தது 27.2 மில்லியன் – சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு...

வடக்கு, கிழக்கை இணையோம்; பொலிஸ் அதிகாரத்தை வழங்கோம்! – இது தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு என்ன?

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தெளிவான கொள்கையாகும். ஆனால், இந்த விடயங்களில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

வவுனியா, சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகள்!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு- செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான செலவீனங்களை முன்மொழிந்து ஆற்றிய உரையிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார். அந்த உரையில் அவர் மேலும்...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும். தமிழ் மக்களுக்குப் பொருத்தமான வேளையில் கூட்டமைப்பின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு, தமிழசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள்,...

பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.எம்.எஸ்.இந்திரகுமார வன்னிநாயக்கா (வயது 30) வியாழக்கிழமை (18) காலை சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி, பொலிஸ் அதிகாரி வியாழக்கிழமை காலை உணவு உண்ட நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். சிகிச்சைக்காக இவரை, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்...

முதலமைச்சர் அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருக்கின்றார் – கஜதீபன்

'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. உடனடியாக முதலமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்' என ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதம், இரண்டாவது நாளாக கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று...

நாய்கள் ஜாக்கிரத்தை படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் சிபிராஜ்

சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இதில் சிபிராஜிற்கு ஜோடியாக அருந்ததி நடித்திருந்தார். மேலும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்திருந்தது. கடத்தல் கும்பலிடமிருந்து தனது மனைவியை நாயின் உதவியுடன் சிபிராஜ் கண்டுபிடிப்பதை திரைக்கதையாக அமைத்திருந்தார்கள். இப்படம்...

விஜய்யுடன் போட்டிபோடும் சரத்குமார்!

ஆரம்ப கால சினிமா படங்களில், வருவதுபோல் நடிகர்களே பாடல்களை பாடுவது, இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. விஜய், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பட்டியலில் சரத்குமாரும் முக்கிய இடம் பிடிக்க ஆசை படுகிறார் போல உள்ளது. பத்து வருடங்களுக்கு முன் இரண்டு மூன்று பாடல்களை பாடியுள்ள அவர் இப்போது நடித்து...

யாழ்.பல்கலையின் ஆராய்ச்சி மாநாடு

யாழ். பல்கலைக்கழகத்தினால் முதல் தடவையாக எற்பாடு செய்யப்பட்ட பௌதீக,மனிதவள, பொருளாதார,வணிகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் தேசிய ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவரும் பேராசிரியருமாகிய ஜீ.மிகுந்தன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியருமாகிய வசந்தி அரசரட்ணம்,அமெரிக்க தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி...

தமிழ் பேசும் மக்களை சமநிலையில் பார்த்தவர் ஜனாதிபதி!

தமிழ் பேசும் மக்களனைவரையும் ஒரே நாட்டவர் என்ற ரீதியில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இணையாக பராமரித்தவர் வருபவர் எமது ஜனாதிபதியே என சிறுதொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும்...

நல்லதொரு இலங்கையை உருவாக்க நாமனைவரும் கைக்கோர்த்து முன்னோக்கிச் செல்வோம் – ஜனாதிபதி

முல்லைத்தீவு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை ! உங்கள் பகுதிக்கு வந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பௌத்த குருமார் மற்றும் அனைத்து சமய பெரியார்களிடமும் ஆசிர்வாதம்பெற்றவனாக உரையாற்ற விரும்புகிறேன். குறிப்பாக 30 வருட காலமாக நீங்கள் இருளில் மூழ்கியிருந்தீர்கள். இந்த 30 வருட காலத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts