Ad Widget

சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் ஏகமனதாக ஏற்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குழு நிலைக்கு மாறிய சபையில் 16 சரத்துக்களை கொண்ட நியதிச்சட்டம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றன.

திருத்தங்களுடன் நியதிச்சட்டம் சபையில் அமைச்சர் சத்தியலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அதனை உறுப்பினர் பரஞ்சோதி வழிமொழிந்தார். நியதிச்சட்டம் ஏகமனதாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு குறித்த சட்டம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவர் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் . நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

Related Posts