Ad Widget

யுவதியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று காலை தண்ணீர் எடுக்கச் சென்றவர்கள் கிணற்றினுள் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர். இதுகுறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல்கொடுக்கப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கைச் சேர்ந்த குணரட்ணம் லக்சிகா (வயது 18) என்ற யுவதியை கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருந்து காணவில்லை என வீட்டார் தேடி வந்தனர் என்றும், இன்று காலை வீட்டுக் கிணற்றில் குறித்த யுவதி சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts