- Saturday
- May 9th, 2026
2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பழைய அமைப்பின் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களுக்கான ஏற்றுக்கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய...
யாழ்ப்பாணத்தில் எந்வொரு ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து யாழில் பதற்ற நிலை ஏற்பட்டது. கடந்த 20ம் திகதி மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது, மாணவியின் கொலைக்கு உரிய...
புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த...
அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்...
யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேர் தொடர்பில் நீதிமன்றில் ஆயராகப் போவதில்லை என தாங்கள் தீர்மானிக்கவில்லை என வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழில் மாணவி...
யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 129 பேரும், வவுனியா மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இவர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 129பேரும் 3 பஸ்களில் பவள் கவச வாகன பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தின்...
புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட நபர்களில் முதலில் மூன்று சகோதரர்கள் கைதானார்கள். அவர்களைத்தொடர்ந்து சுவிஸ் பிரஜை உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு தற்போது பொலிசாரின் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுவிஸ் பிரஜையான மகாலிங்கம் சசிகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து...
நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) குழப்பம் விளைவித்தவர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் வெள்ளிக்கிழமை (22) பார்வையிட்டார். நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் வந்திருந்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இது வரை கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களில் எவரும் தப்பிக்க முடியாது. பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பிக்கவே முடியாது. சட்டம்...
வேலணைப் பகுதியில் இளம் பெண்ணொருவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவுவரை வீடுதிரும்பாததை அடுத்து நேற்றிரவு அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கடைகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பொதுச்சந்தை, அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும் குறைவாக உள்ளன.
யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் சிக்கிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் பாதுகாப்பு கருதி போடப்பட்ட இரும்பு கம்பிக்குள் அகப்பட்ட நிலையிலேயே விரல் நுனி மீட்கப்பட்டுள்ளது. நேற்று...
யாழ். வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் நேற்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல்...
புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு ஒப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது.என்றார் அவர்,யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்....
வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டடத் தேவைகளுக்கு தேவையான மணலை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மணலை பொதி செய்து வழங்குவது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வியாழக்கிழமை (21)...
யாழில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது வவுனியாவில் வைத்து நேற்று மாலை 7 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழில் இருந்து திருகோணமலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் மீது வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதிப் பகுதியில் வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில்...
வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி பல கோணங்களில் நடத்தப்படும் போராட்டங்களை சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையென மாயையொன்றை உருவாக்குவதற்கு ரெளடி கும்பலொன்று முயற்சிக்கிறது என்றும், இதன் பின்புலத்தில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நீதிமன்றத்தின் மீதும் இந்தக் குழுதான் தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணைகளை திசைதிருப்புவதற்கு...
யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காகவும் வட மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நீதிமன்றில் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நீதிமன்றக்...
Loading posts...
All posts loaded
No more posts
