Ad Widget

வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட சுவிஸ் பிரஜை எவ்வாறு கைதானார் : விளக்குகின்றார் துவாரகேஸ்வரன்

புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட நபர்களில் முதலில் மூன்று சகோதரர்கள் கைதானார்கள். அவர்களைத்தொடர்ந்து சுவிஸ் பிரஜை உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு தற்போது பொலிசாரின் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுவிஸ் பிரஜையான மகாலிங்கம் சசிகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வீ.ரி.தமிழ்மாறன் என்னும் சட்டபீடாதிபதி மகாலிங்கம் சசிகுமார் என்பவரை தப்பிக்கவைக்க உதவியதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது பற்றிய விடையங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரான தியாகராசா துவாரகேஸ்வரன் விளக்கி கூறியுள்ளார்.

Related Posts