Ad Widget

நீதிமன்ற விவகாரம்; 129பேரும் அநுராதபுரம், வவுனியா சிறைகளுக்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 129 பேரும், வவுனியா மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இவர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 129பேரும் 3 பஸ்களில் பவள் கவச வாகன பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர், கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

நீதிமன்ற கட்டடத்துக்கு கல்வீசி கண்ணாடிகளை உடைத்தமை, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை உடைத்தமை, பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியமை, பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், சமாதானத்துக்கு பங்கம் விளைவித்தவர்கள், கலகத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டிலே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Posts