Ad Widget

வேலணையில் இளம்பெண்ணை காணவில்லை!

வேலணைப் பகுதியில் இளம் பெண்ணொருவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவுவரை வீடுதிரும்பாததை அடுத்து நேற்றிரவு அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts