Ad Widget

யாழ் – திருமலை இ.போ.ச பஸ்கள் மீது வவுனியாவில் தாக்குதல்!

யாழில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது வவுனியாவில் வைத்து நேற்று மாலை 7 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழில் இருந்து திருகோணமலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் மீது வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதிப் பகுதியில் வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைவடைந்ததுடன் சாரதியும் காயமடைந்தார். இருப்பினும் பஸ் சாரதி சாதுரியமாக வீதியோரமாக பஸ்ஸை நிறுத்தியதால் அதில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts