- Wednesday
- May 20th, 2026
மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பல அண்மைய காலமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், படுவான்கரை மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது. பற்றைக் காடாய் கிடந்த குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்த மக்கள், உயிர்நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடரேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தினர். இச் சிரமதானப்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காதமையினால் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் கூறியுள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததால்...
வடக்கின் பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுவதால், அக் கிராமங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பகுதியிலுள்ள பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுந்துள்ளதோடு, வன்னேரிக்குளம் மற்றும் ஆணைவிழுந்தான் ஆகிய...
வடக்கிலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனவும், ராணுவத்தினர் மீளப் பெறப்பட வேண்டுமெனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்களுக்கு ராணுவத்தினர் சஞ்சலமடையமாட்டார்கள் என புதிய ராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தமது கடமைகளை நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டாலும், வடக்கின்...
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு...
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில்...
மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார். ஆனால், மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத்...
“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும்...
இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற உள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர். இதேவேளை தரம் 05...
வவுனியா – ஶ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மீட்கப்பட்ட நீர் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த நீர் நாய் நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலர் மூலம் பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அதனை...
விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் இரு வெடிகுண்டுகள், யாழ். குப்பிளான் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குப்பிளான் வடக்குச் சமாதி கோவிலடிக்கு அருகாமையில், வீட்டுடன் இணைந்த தோட்டக் காணியொன்றில் இருந்து நேற்று (புதன்கிழமை) இவ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசம் கடந்த 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகின்றமையினால்,...
மன்னாரில் மனித மனித எச்சங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகிலுள்ள கழிவு நீர் செல்லும் மதகிலிருந்து குறித்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
வித்தியாவின் உயிரிழப்பு மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நீதாய தீர்ப்பாயத்தில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நேற்றய தினம் (05.07.2017) ஆம் திகதி வரை...
வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றாதவர்களை, தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றனர் என்று போலியான உறுதிப்பத்திரங்களை வழங்கிய பாடசாலைகளின் அதிபர்களும், அதனை உறுதிப்படுத்தியவலயக் கல்விப் பணிப்பாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். விரைவில் இந்த விசாரணை நடத்தப்படும் என்று வடக்கு மாகாண க் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். தகுதியற்ற தொண்டர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர்களுக்கும் அதனை...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார் . யாழப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அவர், நாம் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்களினை நடத்திவருகின்றோம்.மக்களது கேள்விகளிற்கு பதிலளிக்கின்றோம். பலரும் மாகாணசபை விவகாரம், அரசியல்...
இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம், எந்தவொரு விசாரணைக்கும் தயாராக உள்ளது. அது, போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை” என, புதிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இன்று (5) தெரிவித்தார். இலங்கையின் 22ஆவது இராணுவத் தளபதியாக, இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்ற போதே, அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை இராணுவத்துக்கு தண்டனைச் சட்டம், இராணுவச் சட்டம்...
நாட்டில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வியமைச்சு இன்று (புதன்கிழமை) விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் தம்மை தாக்காதவாறு உடம்பை முழுமையாக மறைக்கும் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியுமாறு...
முழங்காவில் பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது – 18) என்ற இளைஞனை, கடந்த ஒரு வார காலமாக காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன், மாலை...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....
Loading posts...
All posts loaded
No more posts
