Ad Widget

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை : புதிய இ​ராணுவ தளபதி

இலங்கை இராணுவம், எந்த​வொரு விசாரணைக்கும் தயாராக உள்ளது. அது, போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை” என, புதிய இ​ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இன்று (5) தெரிவித்தார்.

இலங்கையின் 22ஆவது இராணுவத் தளபதியாக, இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்ற போதே, அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை இராணுவத்துக்கு தண்டனைச் சட்டம், இராணுவச் சட்டம் என, இரண்டு சட்ட விதி முறைகள் காணப்படுகின்றன. இவைகளுக்கு உட்பட்டே, தமது கடமைகளை அது புரிகின்றது.

“ஆதலால், இராணுவம் தவறு செய்வதற்கு வாய்ப்பு இல்லை” என, அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts