Ad Widget

விக்னேஸ்வரனின் கருத்திற்கு சஞ்சலமடைய மாட்டோம்: ராணுவ தளபதி

வடக்கிலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனவும், ராணுவத்தினர் மீளப் பெறப்பட வேண்டுமெனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்களுக்கு ராணுவத்தினர் சஞ்சலமடையமாட்டார்கள் என புதிய ராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமது கடமைகளை நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டாலும், வடக்கின் பாதுகாப்பிற்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லையென்றும், வடக்கின் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட சகல விடயங்களையும் ராணுவத்தினர் அறிந்துவைத்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், வடக்கில் கட்டாயமாக ராணுவத்தின் வசம் இருக்கவேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களைத் தவிர ஏனைய இடங்களை விடுவிப்பது அவசியமாகும் என்றும், அதனால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென்றும் ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Related Posts