முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...

பெண்களுடன் சேட்டைவிட்ட சிம் விற்பனையாளர்கள் நையப்புடைப்பு!!!

கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம், கலட்டிச்...
Ad Widget

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய...

சிகரெட் விற்பனையை நிறுத்துவதில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் முதலிடம்!

“சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் 107 நகரங்களில் (கிராம மட்ட நகரங்கள்) அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக 22 நகரங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும்...

விபத்துக்குள்ளான 6 இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்

வடக்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருந்த இந்திய மீனவர்கள் 6 பேரினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படை குழு ஒன்றே இவ்வாறு நீரில் மூழ்கி கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். குறித்த மீனவர்கள் தங்களது படகு விபத்துக்குள்ளானதை அடுத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு...

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ்

வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில...

யாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார். சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7...

குள்ள மனிதர்களின் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 27 இன் கீழ் 2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு...

காங்கேசன்துறையில் விகாரையை புனரமைக்கும் பணி ஆரம்பம்!

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸ விகாரையை மீள புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது. பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர்...

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...

வடக்கில் 88 சதவீதமான காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது – யாழில் ஜனாதிபதி

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் விடுவிக்க...

வடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...

வருட இறுதிக்குள் தீர்வு வேண்டும்: ஜனாதிபதியிடம் மாவை வலியுறுத்தல்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். மேலும், வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மயிலிட்டி துறைமுக...

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழப்பு!

சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளை, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோட்டார்...

யாழில் ஆவா குழுவிற்கு சவால் விடும் புதிய குழு?

கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று வீடுகள், தேனீர் கடை, வாகனத்தரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று(புதன்கிழமை) மாலை...

யாழில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

யாழ். பல்கலைக்கழக மாணவனின் உன்னத பணி

மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர்...

கூட்டமைப்பு ஒரு கூழ்முட்டை! அதனை அடைகாப்பது முட்டாள்த்தனமானது -பொ.ஐங்கரநேசன்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றே தமிழ்மக்கள் நம்பியிருந்தார்கள். இதனாலேயே பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியில் மைத்திரி அரசையும் வெல்லவைத்தார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடைபெற்றது தமிழினப்...

ரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு!!

சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற சிறுமி கடந்த ஜுன“ மாதம் 25 ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் கழுத்தில்...

முச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

முச்சக்கரவண்டி சாரதிகள் குறைந்தபட்ச வயதெல்லையை 35 ஆக மட்டுப்படுத்த தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனையை முன்வைத்திருந்தார்....
Loading posts...

All posts loaded

No more posts