இராணுவத்தினரிடம் இருந்து ஆலயத்தை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை, இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தாருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ஆலய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 15 வருட காலத்திற்கு மேலாக குறித்த ஆலய பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஆலய சூழலில்...

நல்லூருக்கு சென்ற இளைஞனை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என அவரது தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும்...
Ad Widget

வடக்கில் இராணுவ சின்னங்களை அகற்ற முடியாது என்கிறார் ருவான் விஜேவர்தன!

வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற...

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்து,...

அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலைப் பேசமாட்டோம்: சம்பந்தன்

எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு...

தமிழர் தாயகப்பகுதிகள் ஆக்கிரமிப்பு!- ஜனநாயக ரீதியிலான கண்டனப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பையும், அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்த்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையினால் (இன்று) செவ்வாய்க்கிழமையன்று (28-08-2018) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (யாழ்-பல்கலை) தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், தமிழர் தாயகத்தின் இதயபூமியாம் முல்லை மண்ணினைப்...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைத்தொழிற்சாலைகளை மீள...

வடக்கு முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெற்கில் ஒரு முகத்தையும், வடக்கில் இன்னொரு முகத்தையும் காட்டி இரட்டை வேடம் போடுவதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தெற்கில் சிங்களவர்களுடன் சிநேகிதம் கொண்டு, அவர்களை உறவுக்காரர்களாக்கியுள்ள விக்னேஸ்வரன், வடக்கில் சிங்களவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நாடாகமாடுவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யாழ். பொதுநூலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

Coit Tower, Alcatraz and Part of San Francisco Bay

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா!

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரில் இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு...

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார். எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக...

உயரமான முன்னாள் போராளிக்கு மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் நேற்றையதினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம்...

தமிழர் தாயகத்தை கூறுபோடுவதற்கு எதிராக ஒன்றிணைவோம்: சத்தியலிங்கம் அழைப்பு

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வேறு வடிவில் தோற்றம்: வரதராஜன் பார்த்திபன்

முள்ளிவாய்க்காலுடன் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது வேறு வடிவில் தொடருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிய கண்டன அறிக்கையிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இரத்தம் இன்றி சத்தம் இன்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை...

ஊடகவியலாளர் சாளின் மீதான ரிஐ.டி யினரின் விசாணைக் கெடுபிடிக்கு கண்டனம்

ஊடகவியலாளர் உதயராசா சாளின் அவர்கள் கடந்த 22-08-2018 அன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் இதணை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிடப்பட்டுள்ள கண்ட அறிக்கை.. ஊடகவியலாளர் உதயராசா சாளின் அவர்கள் கடந்த 22-08-2018 அன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம்...

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (24) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1696 ரூபாவாக மாற்றப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள்...

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐ.நா.வை சமாளிப்பதற்கானது: சுரேஸ்

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்...

கடற்றொழில் அமைச்சரின் உத்தரவும் பொய்யாகிப் போனதா?- யாழ். மக்கள் விசனம்

யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அத்துமீறி தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பான கடற்றொழில் அமைச்சரின் உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து யாழ். மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும், அமைச்சரின் உத்தரவு ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கும் செயலா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவித்த மக்கள், ”கடந்த...

தமிழக மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை: ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 27 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு மீனவர்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 ஆயிரம் அபராதம்...

மகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையும் முல்லை மக்கள்!!! அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை...
Loading posts...

All posts loaded

No more posts