Ad Widget

தமிழக மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை: ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 27 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு மீனவர்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களுக்கான அபராத தொகையை இந்திய துணை தூதரக அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

Related Posts