யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என அவரது தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
யாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை வீட்டில் நல்லூர் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில் நேற்று மதியம் வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவரது தாய் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.