சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளை, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீதும் மோதியுள்ளது.
இதில் உயிரிழந்த இளைஞர்களின் சடலத்தினை சாவகச்சேரி வைத்தியசாலையில் புகையிரத பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.