முன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நியமனமானது சமாதானத்திற்கு ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது என, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த விடயம்...

அடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்

“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள மருத்துவர் ஒருவரின்...
Ad Widget

4,100 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

அரச சேவைக்கு 4,100 பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் பூர்த்தி அடைவதை முன்னிட்டு இந்நாட்களில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ´மூச்செடுத்த மூன்று வருடங்கள்´ என்பது 3 வது நிறைவு ஆண்டின்...

இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: முதலமைச்சர்

வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார். போர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்...

வட மாகாண சபை அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றது – தவராசா

வட மாகாண சபை தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

சரத் பொன்சேகாவும் ஒரு யுத்தக்குற்றவாளியே: சிவாஜிலிங்கம்

அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்சஷல் சரத் பொன்சேகாவும் ஒரு யுத்தக்குற்றவாளியே என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்கள் அவருக்கு...

“நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்” – விஜயகலா

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரச நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார்....

அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் : யாழ்ப்பாண மாநகர சபையில் கடும் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கான வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை அரச புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று (20) திங்கட்கிழமை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 30 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கிவைப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. 30 பட்டதாரிகளுக்கு அலரிமாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன. புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது. அதற்கமைவாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேக் கடை மூன்றாவது தடவையாகவும் இன்று முற்றுகை!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்....

மருத்துவருக்கு அச்சுறுத்தல்: யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கண்டனக் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் அவரது வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று திங்கட்கிழமை மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த மருத்துவர்கள், கைது செய்யப்பாடத...

நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி விற்பனை நிலையம் திறப்பு

பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர். 1980 ஆம்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ; யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த...

கொக்குவில் வீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொக்குவில் சம்பியன் லேனில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “3 மோட்டார்...

சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன்

சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும், இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும்,...

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் டெனிஸ்வரன் கோரிக்கை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு தமிழனத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிடம், வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை...

வடக்கிற்கு இந்திய வீட்டு திட்டமே சிறந்தது: கூட்டமைப்பு

வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது எமது மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதானதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்...

யாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

யாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக்...

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதால் அவர்கள் எதையாவது செய்தே தீர...
Loading posts...

All posts loaded

No more posts