குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்

வாள்வெட்டுக் கும்பல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தமக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கேட்டுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை இரகசியமாக தொலைபேசியிவோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்குமாறு, அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தலையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற...

ஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்!! :பொலிஸாரிடம் தாய் கதறல்

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...
Ad Widget

கிளிநொச்சியில் தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு பாலியல் குற்றச்சாட்டில் விளக்கமறியல்!

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில்,...

9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு! மரணம் தொடர்பில் சந்தேகம்!!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலமொன்று நேற்றைய தினம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுவன் தனிமையில் இருந்துள்ளார். அவனது 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார். வேலை...

முன்னாள் ஆளுநர் பதவிவிலக காரணமான சி.வி.விக்னேஷ்வரனே வருத்தப்படுவது வேடிக்கையானது

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ்.பளிகக்கார பதவிவிலக சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவரது இராஜினாமாவிற்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக...

பணிநிறுத்தத்தை கைவிட்டு புதிய போராட்டத்தில் குதித்த தனியார் பேருந்து ஊழியர்கள்!

அனைத்து இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள், பணிநிறுத்த போராட்டத்தை கைவிட்டு, சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களது பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை முன்வராத நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து உரிமையாளர்களின் அச்சுறுத்தலை தொடர்ந்தே ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக அனைத்து இலங்கை தனியார்...

பலாலிக்கான வானூர்திப் பாதை வரையும் பணிகள் ஆரம்பம்!!

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தால், பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு வானூர்­தி­கள் வருகை தரும், வெளிச் செல்­லும் பாதை வரைபடம் வரை­யும் பணி, சிவில் வானூர்­திப் பணி­ய­கத்­தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அடிப்­ப­டைத் தேவை­களை மாத்­தி­ரம் முத­லில் பூர்த்தி செய்து தமி­ழ­கத்­துக்­கான...

ஊரெழுவில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளை!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று...

தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு!

தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே...

வடக்கு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணியக் கூடாது: முதலமைச்சர்

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்கான 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகள்...

ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது – கல்வியமைச்சர்

மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு...

இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு...

லண்டனில் இருந்து சாவகச்சேரி க்கு வருகை தந்த பெண் சடலமாக மீட்பு

லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த பெண், அவருடைய உறவினர்களுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து...

வட்டுக்கோட்டை ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு – மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை விண்ணப்பத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது. “சந்தேகநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் சில ஆவணங்கள் மன்றில் இன்னும் முன்வைக்கப்படவில்லை. எனவே சந்தேகநபரைப் பிணையில்...

ரவிராஜ் உருவச்சிலைக்கு சுகாதார அமைச்சர் அஞ்சலி!

சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சருடன், பிரதி சுகாதார அமைச்சர்,...

வடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் – யாழில் ராஜித

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடேனேயே நாம் ஆட்சியை...

நல்லவர்கள், சிறந்த திறமையுடையவர்களை இங்கு விட்டுவைக்க மாட்டார்கள்: முதலமைச்சர்

ஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், போர்க்காலத்தில் மஹிந்த அரசு செயற்பட்டதைப் போலவே, இந்த நல்லாட்சி அரசும் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...

முல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து...

யாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்!

யாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் முன்வர வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை கிளை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை)...

விடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது!

யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் குறித்த விடுதியில் தங்கியபோது,...
Loading posts...

All posts loaded

No more posts