யாழ். குடாநாட்டில் மிகவும் வேகமாகப் பரவும் பாதீனியம்.

யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் எழுபது வைத்தியர்களுக்கு பற்றாக்குறை. கேதீஸ்வரன்.

யாழ் . மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மேலும் 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் என யாழ் . மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ . கேதீஸ்வரன் தெரிவித்தார் . (more…)
Ad Widget

யாழ் செயலக அதிகாரிகள் அசமந்தம் – மனித உரிமை அணையாளரிடம் பட்டதாரிகள் முறைப்பாடு

யாழ் . மாவட்ட செயலகம் , பிரதேச செயலகங்கள் , திட்டமிடல் பணிப்பாளர்களின் அசமந்தப்போக்கினால் தமக்கான நிரந்தர நியமனங்கள் தாமதமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்ற யாழ் . மாவட்ட பட்டதாரி உத்தியோகஸ்தர்கள் (more…)

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

மயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த் துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. (more…)

வவுனியா மாவட்ட விவசாயிகளைச் சந்தித்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. (more…)

இராணுவ வீரர் – தமிழ் பெண் திருமணம்

11ஆவது சிங்க றெஜிமேட்டினை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் சுதுமலை வீதி தாவடியினைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. (more…)

சர்வதேச மீனவர்தினத்தை வடக்கில் துக்கதினமாக கடைப்பிடிக்க ஏற்பாடு.

உலகளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள மீனவர் தினத்தை வட மாகாகண மீனவர்கள் பகிஷ்கரித்து துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு வடமாகண மீனவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது . (more…)

முரளிதரனுக்கு தமிழன் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்

வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் அறிந்திராத முத்தையா முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை' என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். (more…)

வறுமையால் பாடசாலையைவிட்டு விலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு – அரச அதிபர்

யாழ் . மாவட்டத்தில் வறுமை காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் சிறுவயதிலேயே கல்வியை இழந்துள்ள நிலையில் சட்டத்துக்கு மாறாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் . (more…)

யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணர் விருதிற்கான நேர்முகத்தேர்வு

ஜனாதிபதி சாரணர் விருதிற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. (more…)

வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வெற்றுக் கண்களால் பார்க்கும் அவகாசம் இலங்கை மக்களுக்கு கிடைக்க இருப்பதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு தெரிவித்தது. (more…)

வடக்கில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை – கல்வி அமைச்சின் செயலாளர்

வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ். பற்றிக்ஸ் வீதியிலிருந்த ஜனாதிபதியின் பதாகை இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை எரிக்கப்பட்டுள்ளது. (more…)

டேவிட் கமரூன் இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளார்!-இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவரை கோடிட்டு பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் தமது இலங்கை பயணம் வெற்றியளித்துள்ளதாக கெமரோன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை கமரூன், இலங்கைக்கு வந்தபோது விருந்தினர் புத்தகத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளார். அத்துடன்...

யாழில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளன: ஸ்ரீரங்கேஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து செல்கின்றதாக பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

மேலதிகமாக நிதியை ஒதுக்கவும்: வட மாகாண சபை கோரிக்கை

வட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்

வடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண முதல்வர், ஏனைய உறுப்பினர்கள் புறக்கணிப்பு துரதிஸ்டவசமானது

இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமானது நல்ல நோக்கங்களை முன்வைத்து நடாத்தப்படுகின்ற போதும் தவறான புரிதல்கள் மாறுபட்ட உள்நோக்கங்கள் காரணமாக இதில் ஏனைய தரப்பினரும் கலந்து கொள்ளாமை துரதிஷ்டவசமானது (more…)

குறைகளைக் கூறுவதை நிறுத்தி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கவேண்டும் – அரசாங்க அதிபர்.

குறைகளைக் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அலுவலகம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts