Ad Widget

வறுமையால் பாடசாலையைவிட்டு விலகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு – அரச அதிபர்

Suntharam arumai_CIயாழ் . மாவட்டத்தில் வறுமை காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்கள் சிறுவயதிலேயே கல்வியை இழந்துள்ள நிலையில் சட்டத்துக்கு மாறாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் .

இந்த ஆண்டில் மட்டும் 278 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டுவிலகியுள்ளனர் . இதற்கு அவர்களின் வறுமையே பெரும்பாலும் காரணமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது .

யாழ் . வீரசிங்கம் மண்டபத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவும் இணைந்து நடத்திய சிறுவர் தின நிகழ்வில் யாழ் . அரச அதிபர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் .

இதில் அவர் மேலும் உரையாற்றுகையில் :

குழந்தைகள் பாதிப்படைவதற்குப் பெற்றோர்களே முதற் காரணிகளாக உள்ளனர் . இதுவரை 77 பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன . ஒரு சமூகத்தில் பொறுப்பான இடங்களில் உள்ளவர்களாலேயே இவ்வாறான தவறுகள் மேற்கொள்ளப்படுகின்றன .

பிள்ளைகள் சரியான முறையில் வழிநடத்தப்படவேண்டும் . பெற்றோர்கள் பிள்ளைகளின் விடயத்தில் கண்டும் காணாதது போல் இருந்துவிடாது மிகவும் கவனமாகப் பிள்ளைகளைக் கையாழுதல் வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts